9.028 சேதிராயர் - கோயில் (கோயில் (சிதம்பரம்) ) |
Back to Top
சேதிராயர் திருவிசைப்பா
9.028  
சேதிராயர் - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச் சால நாள் அயற் சார்வதி னால்இவள் வேலை யார்விட முண்டுகந் தீரென்று மால தாகுமென் வாணுதலே.
| [1] |
வாணுதற் கொடி மாலது வாய்மிக நாண மற்றனள் நான்அறி யேன்இனிச் சேணுதற் பொலி தில்லையு ளீர்உமைக் காணில் எய்ப்பிலள் காரிகையே.
| [2] |
காரி கைக்கரு ளீர்கரு மால்கரி ஈரு ரித்தெழு போர்வையி னீர்மிகு சீரியல் தில்லை யாய்சிவ னேஎன்று வேரி நற்குழ லாள்இவள் விம்முமே.
| [3] |
விம்மி விம்மியே வெய்துயிர்த் தாளெனா உம்மை யேநினைந் தேத்தும் ஒன்றாகிலள் செம்ம லோர்பயில் தில்லையு ளீர்எங்கள் அம்மல் ஓதி அயர்வுறுமே.
| [4] |
அயர்வுற் றஞ்சலி கூப்பி அந்தோஎனை உயஉன் கொன்றையந் தார்அரு ளாய்எனும் செயலுற் றார்மதில் தில்லையு ளீர்இவண் மயலுற் றாள்என்றன் மாதிவளே.
| [5] |
மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பனென் றோதில் உய்வன் ஒண் பைங்கிளி யேஎனும் சேதித் தீர்சிரம் நான்முக னைத்தில்லை வாதித் தீர்என்ம டக்கொடியையே.
| [6] |
கொடியைக் கோமளச் சாதியைச் கொம்பிளம் பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம் இடியச் செஞ்சிலை கால்வளைத் தீர்என்று முடியும் நீர்செய்த மூச்சறவே.
| [7] |
அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகிய மறவ னேஎனை வாதைசெய் யேல்எனும் சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்எனும் பிறைகு லாம்நுதற் பெய்வளையே.
| [8] |
அன்ற ருக்கனைப் பல்லிறுத் தானையைக் கொன்று காலனைக் கோள் இழைத் தீர்எனும் தென்ற லார்பொழில் தில்லையு ளீர்இவள் ஒன்று மாகிலள் உம்பொருட்டே.
| [9] |
ஏயு மாறெழிற் சேதிபர் கோன்தில்லை நாய னாரை நயந்துரை செய்தன தூய வாறுரைப் பார்துறக் கத்திடை ஆய இன்பம் எய்தி யிருப்பரே.
| [10] |